சனி, 18 டிசம்பர், 2021

சாதிகள் இல்லை

 சுதந்திரம் பெற்றது சிறப்புற வாழ்ந்திட

இதயங்கள் பலவும் இணைந்து பெற்றது
இரத்தம் சிந்திய உயிர்கள் பலவும்
இரந்து பெற்றது இல்லை அறிந்திடு
வீரமுழக்கம் வானைப் பிளந்தது நாடெங்கும்
வீறுகொண்ட மக்கள் வெள்ளம் வீதிகளில்
உத்தமத் தலைவர்கள் உழன்றனர் சிறைகளில்
சித்தமெலாம் சுதந்திரம் ஒன்றே ஓங்கியதன்று
ஒற்றுமை ஓங்கி தேசம் மிளிர்ந்தது
கற்றது இதனால் ஒன்றே குலமென
இந்திய நாடெனப் போற்றிய நாட்களாய்
இமயம் முதலாய் குமரி வரையில்
வங்கம் முதலாய் அரபிக்கடல் வரையில்
பரந்து விரிந்த நாடெனப் போற்றிய
பாரதம் தோன்றிய வரலாறு ஆனது
பெற்ற சுதந்திரம் பேணிக் காப்போம்
உற்ற நண்பராய் அணைத்துச் செல்வோம்
சாதிகள் இல்லையென உரக்கச் சொல்வோம்
வீதிகள் தோறும் உறவினர் என்போம்

கருத்துகள் இல்லை: