சனி, 18 டிசம்பர், 2021

ஒன்றைச் சார்ந்து மற்றொன்று

 மலரோடு சேர்ந்த நார் மாலையாகும்

மனதோடு இணைந்த அன்பு காதலாகும்
நதியோடி கடலிலே கலந்து போகும்
நட்போடு நாமெலாம் ஒன்று சேர்வோம்
உடலோடு கலந்து உயிர் உருவாகும்
உணர்வோடு உறைந்து பாசம் தோன்றும்
பண்ணோடு கலந்து இசை உருவாகும்
பண்போடு ஒன்றாகி கருணை பிறக்கும்
கற்பனையோடு இணைந்து கவிதை முகிழ்க்கும்
கல்வியோடு கலந்து அறிவு வளரும்
ஈகையோடு உலகில் வறுமை ஒழியும்
ஈரமுள்ள மனதில் இரக்கம் தோன்றும்
பகைமை மறைந்து போர்கள் மறையும்
பசுமைப் போர்வை மழையால் விளையும்
ஒன்றைச் சார்ந்து மற்றொன்று என்பது
என்றும் தொடரும் சாத்திரம் ஆகும்

கருத்துகள் இல்லை: