சனி, 18 டிசம்பர், 2021

வைத்தவன் எவனோ

 பூவிலே தேனும் தெங்கிலே நீரும்

மாவிலே இனிப்பும் பாகலில் கசப்பும்
உடலிலே உயிரும் கடலிலே முத்தும்
உலகிலே உயிர்களும் வானிலே கோள்களும்
காற்றிலே உன்மூச்சும் கல்லுக்குள் தேரையும்
ஊற்றிலே தண்ணீரும் விதைக்குள்ளே செடியும்
வைத்தவன் எவனோ இறைவனோ இயற்கையோ
எய்தவன் அவனோ அம்புகள் நாமோ ?

கருத்துகள் இல்லை: