சனி, 18 டிசம்பர், 2021

இயற்கை அன்னை

 சோலையிலே பூத்த மலர்கள் சிரித்தன

சோடிப் புறாக்கள் கூடி மகிழ்ந்தன
ஓடியது புள்ளிமான்கள் தோட்டம் எங்கும்
பாடியது குயிலொன்று கானம் ஒன்றை
வண்ண மயில் தோகை விரித்தாடியது
எண்ணம் எல்லாம் சிந்தனைப் பூக்கள்
தொடுக்கவோ கோர்க்கவோ மாலை ஒன்றை
தொடுவானில் கதிரவனோ சிவந்து நின்றான்
ஒன்றிடவோ இயற்கை அன்னை மடிமீது
என்றெனக்குத் தோன்றுவது இயல்பு தானே

கருத்துகள் இல்லை: