நிறுத்தாதே எழுது என்றான் நண்பன்
நிறுத்தவில்லை நிதமும் எழுதிய கவிதை
பொருத்தமாய் தலைப்பொன்றை தேர்ந்து தந்தான்
விருப்பப் பாடலாய் விருத்தம் சேர்த்து
கருத்துத் துளிகள் சிதறின கவிதையில்
வருத்தம் சிலநேரம் வாழ்வியல் சிலநேரம்
நறுக்கென வினாக்கள் நல்வாழ்வு தத்துவங்கள்
பருவங்கள் கடந்த காதலர் எண்ணங்கள்
பகலவன் பசுமை பலவும் கருவாய்
அணியோ தளையோ நேரோ நிரையோ
அனைத்தும் மறந்த வரிகளே கவிதையாய்
கண்விழித்த முதல்வேளை முகிழ்த்த மலராய்
பண்பாடி மகிழ்வுற்றேன் தமிழோடு உறவாடி
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக