சனி, 18 டிசம்பர், 2021

எதனைப் பாடுவேன்

 கவிதை எழுத மனம் விழைகிறது

கருத்து எதுவென்று கேள்வி எழுகிறது
கார்முகில் தவழும் வான்வெளி அழகையா
காவிரி நதியின் நீள்வழிப் பாதையா
நீலக் கடலின் அலைகளின் ஓசையா
நீரோடு விளையாடும் மீனின் துள்ளலா
புல்நுனிப் பனிநீர் மின்னும் அழகையா
புவிதனை ஒளியூட்டும் கதிரவன் வரவையா
புள்ளினம் குரல்களின் இசையாகும் ஓசையா
பள்ளம் நோக்கிப் பாயும் காட்டாற்றையா
மலைகளின் பசுமைப் போர்வையின் காட்சியா
சிலைகளின் நாட்டிய வளைவுகள் அழகா
எதனைப் பாடுவேன் அன்னைத் தமிழிலே
என்றதொரு ஐயம் மனதிலே ஏனோஇன்று

கருத்துகள் இல்லை: