கவிதை எழுத மனம் விழைகிறது
கருத்து எதுவென்று கேள்வி எழுகிறது
கார்முகில் தவழும் வான்வெளி அழகையா
காவிரி நதியின் நீள்வழிப் பாதையா
நீலக் கடலின் அலைகளின் ஓசையா
நீரோடு விளையாடும் மீனின் துள்ளலா
புல்நுனிப் பனிநீர் மின்னும் அழகையா
புவிதனை ஒளியூட்டும் கதிரவன் வரவையா
புள்ளினம் குரல்களின் இசையாகும் ஓசையா
பள்ளம் நோக்கிப் பாயும் காட்டாற்றையா
மலைகளின் பசுமைப் போர்வையின் காட்சியா
சிலைகளின் நாட்டிய வளைவுகள் அழகா
எதனைப் பாடுவேன் அன்னைத் தமிழிலே
என்றதொரு ஐயம் மனதிலே ஏனோஇன்று
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக