இறைவனின் நாடக மேடையில் இதுவும் நாடகமோ
கறைகள் களைய கருத்தில் இருத்தும் காவியமோ
குறைகள் பலவும் குவிந்தே இருக்கும் என்றானோ
நிறைகள் இருந்தும் நிம்மதி தேடுவதும் இதுதானோ
மறைகள் சொல்லிய நல்லவை மறந்ததன் பலனோ
முறைகள் அற்று வாழ்வதின் விளைவு ஆகுமோ
விடைகள் தேடியே ஓடுவது எங்கே சொல்வாயா
விடுதலை கிட்டுமோ விடியலும் தோன்றுமோ விரைவில்
செயலின் பலனை சேர்ந்தே உணரும் நாட்களோ
செல்லுமோ விட்டு விலகுமோ வினாக்கள் மனதில்
வாழ்வின் தத்துவம் பலவும் அறிந்திடும் தருணம்
வீழ்வதும் உயிர்ப்பதும் நம்மிடம் இல்லை என்பதும்
உயர்ந்தவன் வறியவன் அறிந்தவன் முட்டாள் அனைவரும்
உயிர்ப் பயம் கொள்வது காட்சியாய் நிதமும்
உணர்ந்தோம் இறைவா உனது விளையாட்டு என்றே
கணக்கும் புரிந்தது திருந்தி வாழ்வோம் வாழவிடு !
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக