ஒன்றாய் அனைவரும் வணங்கினால் ஓடிப் போகுமா
இன்றோ நாளையோ என்ற கணக்கில் இல்லையே
இறைவா உன்னையே நம்பினோம் இதனின்று விடுவித்திடு
இத்தனை நாட்கள் பெற்ற தண்டனை போதும்
உணர்ந்தோம் உலகம் முழுதும் உனது மேடையே
கணக்குத் தீர்க்கும் நாட்களோ காரணம் அறியோம்
மன்னிக்கத் தெரிந்த மனமே மானிடம் வாழட்டும்
மன்றாடும் உள்ளங்கள் வேண்டுதல் உன்னைச் சேர்ந்ததா
கண்ணுக்குத். தெரியாத இறையே கவலைகள் அகற்று
நுண்ணுயிர் அழிந்து நிம்மதி வாழ்வில் நிலவட்டும்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக