முண்டாசுக் கவிஞன் முந்திப் பிறந்தானோ
கண்டால் கேட்டுச் சொல்லும் ஐயா
ஏனந்த அவசரமோ தந்தவனே பிரித்தான்
ஏளனம் செய்தே ஏழையாய் வைத்தான்
முரட்டு மீசையும்
முரட்டுத் தமிழும்
முரட்டுக் காளையவன் தறிகெட்ட ஓட்டம்
பெண்ணுக்குச் சமநிலை பேசிப் போனான்
கண்ணனை கண்ணம்மாவை பராசக்தியை அழைத்தான்
வார்த்தைக் கனல் உடல் முறுக்கேறும்
பார்ப்போர் விழியில் ரௌத்ரம் தோன்றும்
அவன் தொடாத வாழ்வியல் ஏதுமுண்டோ
அவனை மறந்தோமே அவதூறு பேசினோமே
கங்கையும் காவிரியும் இணைத்த கவிஞனே
எங்கே நீயென்று ஏங்கித் தவிக்கிறோம்
இறந்த பிறகே உன்புகழ் பாடினோம்
இறைவன் உன்னை இளமையில் அழைத்ததேன் ?
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக