சனி, 18 டிசம்பர், 2021

குட்டிப் பாப்பா

 பிறந்தபோது என்னுருவம் கண்டதில்லை

பிறிதொரு நாள் தங்கை முகம் கண்டேன்
ஆண்டுகள் பலவாக தம்பி முகம் கண்டேன்
வாண்டுகள் முகங்கள் பலவும் கண்டேன்
அன்றொரு நாள் மனைவி அருகில் மகனைக் கண்டேன்
சென்றன காலங்கள் உருண்டோடி மகன் தலைவனான்
இன்றவன் என் போன்றே தந்தையானான்
இறைவன் படைப்பில் இன்னொரு பிறப்பில்
அழகிய உருவில் குட்டிப் பாப்பா
அங்கும் இங்கும் அலைபாயும் கண்கள்
சின்னஞ்சிறு உலகில் இருந்து பெரும் உலகில்
தூரத்தில் இருந்து பார்க்கனுமாம் மகன் சொன்னான்
வாய்க்குள் விரலோடு துணியும் போகாமல் தள்ளிவிட்டு
தும்மலை இரண்டு என்று எண்ணி நின்றேன்

கருத்துகள் இல்லை: