சனி, 18 டிசம்பர், 2021

கார் போன போக்கிலே - 7

பயணத்தின் ஏழாவது நாள். காலைச் சிற்றுண்டி முடித்து, படகு இல்லம் சென்றபோது மக்கள் கூட்டம் இன்னும் சேரவில்லை. ரோவிங் படகுக்கு அனுமதிச் சீட்டு வாங்கி உள்ளே சென்றபோது படகோட்டிதான் துடுப்பு போடுவார், நமக்கில்லை என்றார். என்னோட துடுப்பு போட்டு படகோட்டும் ஆசை பறிக்கப் பட்டது.

மிகவும் அழகான இயற்கைச் சூழலில் ஏரியை வலம் வந்து கொண்டே படகோட்டியிடம் பேசி வந்த போது தெரிந்தது, அவரே கைடாகவும் செயல்படுவார் என்பது. அவர் ராமர் தனது பெயரென்றார். முருகன், ராமன், ராமர் கைடுகள் பெயர் மூன்றிடங்களில்.
ஏரி வலம் முடித்து வெளிவந்து படகோட்டிக்கு நான் சாரதியாக, நல்லூர் நோக்கிப் பயணம். போகும் வழியில் ஓரிடத்தில் மிக அருமையான இயற்கைத் தோற்றம்.சுற்றி மலைகள் நடுவிலே நாங்கள். பனோரமிக் வியூ எடுக்கலாமென முயற்சித்தோம். தெரியலே. அங்கே நிலம் விலைக்குக் கிடைக்குமானு விசாரிச்சா கிடைக்கும்னார். மழை பெய்து மிகவும் பசுமையாய் போகவே மனமில்லாமல் அவ்விடத்தை் விட்டுக் கிளம்புனோம். வழி நெடுக ஓங்கி வளர்ந்த மரக்காடுகள்.
நல்லூர் சுமார் 23 கிமீ தொலைவில் ஏற்காட்டிலிருந்து. காரை பார்க் செய்து விட்டு ஒற்றையடிப் பாதையில் அருவியில் குளிக்கத் தேவையான உடைகளுடன் இறங்கிய போது களிமண் பாதையில் மழை பெய்தால் இறங்குவது கடினமெனத் தோன்றியது. கீழே சென்றபோது அருவியை நெருங்கவே முடியாதது போல வழுக்குப் பாறையும், பாசி படிந்தும் அச்சுறுத்தின. எப்போதும் போல ரிஸ்க்தான் ரஸ்க்கென (வட இந்தியர் கால் மிதிபட்ட ரஸ்க் இல்லை) நமது கைட் உதவியோட அருவியை அடைஞ்சு சுகமான குளியல். குற்றாலத்துல விட்டத இங்கே பிடிச்சாச்சு. இருந்தாலும் அருவிக்கு நடுவிலே போகலே பாசி அதிகம். நல்ல குளியல் முடிச்சு வெளியே வந்தப்ப உடல் குளிர்ச்சியோட மனமும் குளிர்ந்தது. திரும்ப சறுக்குப் பாதைலே ஏறி மேலே வந்து, அங்குள்ள டீக்கடையில் தேநீர் சுடச்சுட அருந்தி வெயில் உடம்பில் சூடேற்ற மறுபடி பயணம்.
வந்த பாதையில் திரும்ப வேண்டாமென வேறு சாலையில் ஒரு வட்டப் பாதையில் பயணம். மழைக்காலங்களில் மலைப் பிரதேசங்கள் தான் எத்தனை அழகு. பார்த்துக் கொண்டே இருக்கலாம் போல. ஓங்கி வளர்ந்த மரங்களூடே பயணித்த படியே ராமரோட பல விசயங்களைப் பேசிக் கொண்டு அவரோட படகுத்துறையை அடைஞ்சு அவருக்கு விடை கொடுத்து முடிஞ்சா அடுத்த நாளும் சந்திக்கலாம்னு சொன்னேன் . இதற்குள் பிற்பகல் ஆகி இருந்தது. நான் அங்கு இருந்த மூன்று நாட்களும் பிற்பகலில் மழை பெய்தது. ஓரிரண்டு நாட்கள் தவிர மதிய உணவு தவிர்க்கப் பட்டது, பசியில்லை.
அறைக்கு வந்து நல்ல ஓய்வு. இரவு உணவுக்கு பரோட்டா சாப்பிட்ட அதே ரோட்டோரக் கடைலே தோசை சுடச்சுட சாம்பார், சட்னியோட எவ்வளவு சாப்பிட்டாலும் அறுபது ரூபாக்கு மேலே ஆகலியேனு ஆச்சர்யம். ருசியும் நல்லாத்தான் இருந்துச்சு. எட்டு மணிக்கெல்லாம் கடைகள் அடைத்து இருட்டாகி இருந்தது. யாரும் மாஸ்க் அணியாமலே உலவினர். கரோனா பாதிப்பு அங்கு அதிகமில்லையென தகவல் தெரிவித்தனர்.
(நாள் ஏழு,

கருத்துகள் இல்லை: