சனி, 18 டிசம்பர், 2021

பொக்கை வாய்க் கிழவர்

 உத்தமர் ஆவது உன்னத நிலையே

உடையைத் துறப்பது உயரிய பண்பே
உலகம் போற்றுவது அகிம்சை வழியே
உண்மை சத்தியம் ஆனது அவராலே
சொல்லால் அவரை மறுமுறை சுடாதீர்
பொல்லாத மனிதரும் தலைவராய் ஏற்றனர்
இந்திய தேசமே இவரால் உயர்ந்தது
பொக்கை வாய்க் கிழவர் பெருமானார்
யாக்கை வருத்தி அமைதியைத் தேடினார்
பிறந்த நாட்டுக்கு ஆவி துறந்தார்
இறந்தும் இந்தியர் மனதில் நிலைத்தார்

கருத்துகள் இல்லை: