சனி, 18 டிசம்பர், 2021

ஏழை உழவன்

 என்ன சொல்லி என்ன பயன்

சொன்ன சொல்ல காக்க வேணும்
வானம் திறந்து மழை கொட்டுது
வனம் எல்லாம் பசுமை சேக்குது
ஏரு ஓட்டி சேத்துலே நாத்து நட்டு
ஏழை உழவன் விதைச்ச நெல்லு
ஊரு முச்சூடும் உண்டு மகிழுது
அவன் வாழ உதவி செய்வோமா
எவனோ அவன் என்று சொல்வோமா
கூப்பாடு வேண்டாம் கூலி போதும்
சாப்பாடு அவன் வயிறு நிறைய
வேறென்ன கேப்பான் கோவணம் போதும்
வேட்டு இல்லாம பாத்துக்க அதுக்கு
நாட்டு நடப்பு புரியலே எனக்கு
ஓட்டு மட்டுமே போடத் தெரியும்
உழைப்பவன் உயர உத்திகள் உண்டா
உண்டு கொழுப்பவன் உயர வழியா
கண்டு சொல்ல யாரும் உளரா
நல்லது நடக்குமா நாளும் கேள்வி
சொல்வதைச் செய்வர் பெரியோர் ஆவர் !

கருத்துகள் இல்லை: