சனி, 18 டிசம்பர், 2021

இன்னொரு காலை

 ஆயிரம் கரங்களோடு ஆதவன் தோன்ற

பாயிரம் பாடியே பக்தர்கள் முழங்க
கடலலை கரையைத் தொட்டே கரைய
கால்களை கைகளை வீசியே நடைபயில
மரங்களைத் துறந்த பறவைகள் கானம்பாட
வரங்கள் வேண்டிய மக்கள் மனமுருக
இல்லமற்ற கூட்டம் உறக்கம் களைய
மெல்ல விடிந்தது இன்னொரு காலை

கருத்துகள் இல்லை: