புலவர்க்கு பொன் வழங்க மன்னன் இல்லை
புலரும் காலையிலே புதுப்புது நுண்ணுயிர் கதைகள்
மலரும் நல்ல நாளொன்று எண்ணியே பலநாட்கள்
மனதில் குழப்பம் விடியல் என்றோ விடையில்லை
நலமா நண்பா என்ற கேள்வி தினமும்
நலமே என்றபின் மனதில் அமைதி ஆனந்தம்
ஏனிந்த மாற்றம் எவருக்கும் தெரியாத புதிராய்
ஏதேதோ கண்ட மனிதன் விடைகாணா தவிப்பில்
பலரது வாழ்வில் பட்டினி பதற்றம் கவலை
புலரும் நற்காலை என்றொரு நப்பாசை நாளும்
தோற்றம் ஒன்றுண்டு மறைவும் உண்டென நியதி
மாற்றுக் கருத்தில்லை இதனில் நம்மில் எவருள்ளும்
இன்றோடு ஒழியும் என்றொரு நாளதனைக் குறிப்போமா
எம்மக்கள் நலம்வாழ ஏதேனும் வழியொன்று சொல்வீரா ??
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக