சனி, 18 டிசம்பர், 2021

நிரந்தரம் என்று எதுவும் இல்லை

 விதைகள் விருட்சங்களாகி கனிகள் விதைகளாக

விடியல் பகலாகி இரவு விடியலாக
சுழலும் உலகில் மாற்றங்கள் பலவும்
நிழலும் நீண்டு மறைந்து போகும்
நிரந்தரம் என்று எதுவும் இல்லை
வரங்கள் பெற்றவனும் வாழ்ந்தது இல்லை
வர்ணங்கள் கலைந்து வெளுத்தே போகும்
வளைந்து நெளிந்து பாதைகள் போன்றே
வாழ்க்கைப் பாதையும் என்பது தெளிந்திடு
வேற்றுமை பாராட்டி வேதனை கொள்வதேன்
ஒற்றுமை வழியில் செல்வதே முறையன்றோ
சொல்பவர் பெரியோர் செவிகளைச் சேர்ந்ததோ
வெல்பவர் எவரோ அறிஞர் அவரே !

கருத்துகள் இல்லை: