சனி, 18 டிசம்பர், 2021

இறைவன் சோதனை

 பாட்டுக்குப் பாட்டெடுத்து பாடுவது நன்றே

நாட்டுக்கு நல்லதொன்று நாள் தோறும் தேடி நின்றே
ஏட்டுக்கு உதவுமிந்த இனிய கவிதைமழை
ஏனோ இறைவன் சோதனை நீள்கிறது
என்றோ தொடங்கி ஓயாமல் தொடர்கிறது
எல்லை இல்லாத தூரம் வரை
மனித நேயமொன்றே மக்களைக் காக்கிறது
புனித உள்ளங்கள் வெள்ளை உடையினிலே
உறவை நினைக்க கொடுத்த வரமாய்
உயிரின் உயர்வை உணர்த்தும் விதமாய்
வீட்டுச் சிறைக்குள் நாட்கள் மாதங்களாய்
கட்டுப் பட்டு கணக்குப் போட்டு
நல்ல நேரம் வருமென்ற நினைவில்
நாமும் காத்திருப்போம் நண்பரே உறவினரே!

கருத்துகள் இல்லை: