அன்னையர் உறவுக்கு இணையில்லை
அவரின் அன்புக்கு ஈடில்லை
போற்றுதற்கு ஒருநாள் போதாது
போதாது பிறவி ஒன்றும்
பொறுமையின் உருவம் அவளாகும்
வெறுமை இல்லமே அவளின்றி
பத்து மாதம் சுமந்தவளே
பத்துமா ஒருநாள் வாழ்த்து
தனக்கென வாழாத தனிப்பிறவி
உனக்கென நானென்ன செய்வேனோ
எப்போதும் உன்மடி தனிச்சுகம்
முப்போதும் உன்னன்பே துணை
காலமெல்லாம் உன்நினைவே என்னுள்
காவல் தெய்வமே நீயே !
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக