சின்னக் கண்ணன் அழைக்கிறான் தாலேலோ
சிறுவிரல் தடவிச் சிரித்தானே தாலேலோ
குழலூதிக் களித்தானே தாலேலோ
குறும்புக் காரனவன் தாலேலோ
வெண்ணெய்த் திருடனே தாலேலோ
கண்ணனே கண்மணியே தாலேலோ
சின்னஞ்சிறு நடைபயில்வான் தாலேலோ
சிரிக்கும் முத்துப்பல் தாலேலோ
ஆயர்பாடி ஆண்டவனே தாலேலோ
ஆவினங்கள் தோழனே தாலேலோ
காளிங்க நர்த்தனனே தாலேலோ
காத்தருள நீவருவாய் தாலேலோ
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக