சனி, 18 டிசம்பர், 2021

வந்தவழி மறந்தவரே

 எதைத்தான் எழுதுவதோ எண்ணிப் பார்க்கிறேன்

வதைத்த ஆங்கிலேயரா வர்ணங்கள் ஆயிரமா
சிதைக்குத் தீவைத்து உடன்கட்டை ஏறியதையா
சிறைக்குச் சென்ற தலைவர்கள் பற்றியா
வாக்குரிமை குடியுரிமை சட்டங்கள் கொடுத்தவரா
திக்கெட்டும் கல்விச்சாலை தொழிற்சாலை திறந்ததையா
கற்பிக்க பள்ளிகள் பலவும் கட்டியதையா
வெற்று வயிற்றுக்கு உணவும் தந்ததையா
குட்டக் குனியாத சமுதாய மாற்றமா
கும்பிட்டே வாழ்ந்த கூனர் நிமிர்ந்ததையா
பெண்களும் கல்விகற்க வாக்களிக்க வகைசெய்ததா
பெரிதாய் மாற்றங்கள் செய்தவர் அவரல்லவா
வாய்க்கூசா பொய்பேசி வந்தவழி மறந்தவரே
வாய்பேச உரிமையே அவர்தந்த சட்டங்கள்
நீதியை விலைபேசி நெருப்பில் போடாதீர்
நீவிரும் நெருப்பில் அழிந்தே சாம்பலாவீர் !

கருத்துகள் இல்லை: