சனி, 18 டிசம்பர், 2021

நல்லதோர் வீணை

 மறுபிறவி வேண்டாமெனச் சொல்வது ஏனோ

மகிழ்வான வாழ்வை மீண்டும் வாழலாமே
துன்புற்றேன் என்பதாலே இன்பமிலை என்பதில்லை
இருள் விலகும் ஒளி பெருகும்
பெரும் புயலும் கரை சேரும்
பிறவிக் கடல் நீந்த துடுப்பாய்
பித்தம் போக்க நல் மருந்தாய்
இறையைத் தேடி பயணிக்கும் உள்ளம்
நல்லவை அல்லவை சேர்ந்தே உலகு
எல்லைகள் எதற்கும் உண்டெனச் சொல்வோம்
வேற்றுமை பேதங்கள் விலக்கிட விழைவோம்
ஒற்றுமை வேண்டி வேள்விகள் செய்வோம்
கற்றது எதனால் கசடுகள் அறிய
சுற்றமும் நட்பும் சுகமாய் வாழட்டும்
நல்லதோர் வீணையின் நாதம் பெருகட்டும்
நல்லவர் பெருகி நானிலம் செழிக்கட்டும்
சொல்லிலே செயலிலே உண்மை நிலவட்டும்
சொந்த மண்ணொரு சொர்க்கம் ஆகட்டும் !

கருத்துகள் இல்லை: