சனி, 18 டிசம்பர், 2021

கார் போன போக்கிலே - 5

மதுரைக்குப் போக முடிவானது என்று முடித்திருந்தேன். அது குற்றாலம் வழியாகப் போவதாக முடிவெடுத்து ஒட்டல் காலி செய்து, குற்றாலம் அடைஞ்சப்ப மணி காலை பதினொன்று. இட்லிகள் ரோட்டோரக் கடைலே சாப்பிட்டு மெயின் பால்ஸ் வழி கேட்டு பயணிச்சப்ப ஐந்தருவி சென்று விட்டேன். ஆனாலும் அருவிக்கு செல்ல அனுமதி இல்லை.

சைக்கிள் காரர் விற்றுக் கொண்டிருந்த பதநீரில் ஊறவைத்த நுங்கைக் குடிச்சுட்டு திரும்பினப்ப தான் ராமன் கைட் தானாக வந்து பேசினார். பிரைவேட் பால்ஸ் போகலாம்னு சொன்னார், மிக அதிகம் அவர் சொன்ன அமவுண்ட்னு யோசிச்சேன். அவர் பால்ஸ்ல குளிக்கறது மட்டுமல்ல, போட்டோ எடுக்க அருமையான இடங்களைக் காட்டறதா சொன்னார்.
சரியென்று ஒப்புக் கொண்டு அவரோட பதினைந்து கிமீ பயணம் செஞ்சு பின் நிறைய கார்களும் பைக்குகளும் இருப்பதைப்பார்த்து என்ன இது கூட்டத்துலே வர முடியாதுனு சொன்னதாலே, அவரே வேறொரு வீடு போன்ற இடத்துக்கு கூட்டிட்டு போனார். அங்கே அவர்களாகவே செயற்கை அருவி உருவாக்கி இருந்தாங்க. ஏற்கனவே ஒரு குடும்பம் குளிச்சுட்டு இருந்தாங்க. அவங்க. வந்த பிறகு நான் குளிக்கப் போனேன். ஒரு மணி நேரம்னு அவர் சொன்னாலும் பதினைஞ்சு நிமிசத்துலே வெளியே வந்துட்டேன். அருமையான தனியான குளியல்.
உடை மாத்திகிட்டு அவருடன் போட்டோ ஷூட் இடத்துக்கு அடுத்த பயணம். மழை விட்டு விட்டு பெய்துட்டே இருந்தது. மிக அழகான பாதை, பசுமை சூழ்ந்த மலைப் பிரதேசம், கண்ணுக்குக் குளிர்ச்சியா. படங்கள் நிறைய எடுத்துக்கிட்டு மீண்டும் குற்றாலத்துக்குத் திரும்பினோம். அவரை இறக்கி விட்ட இடத்துலே ரோட்டோரக் கடைலே ஊறுகாயும்(செரிமானம் நன்றாக ஆகுமென்றார்) பழமும் வாங்கிட்டு அவரோட நம்பர் வாங்கிக் கொண்டு, மதுரைச் சாலையில் பயணம் தொடர்ந்தது.
திருமங்கலத்தைக் கடந்து மதுரையில் நுழைஞ்சு அவுட்டர்லே முதல்லே கண்ணுலே பட்ட ஓட்டல்லே விசாரிச்சு தங்கினா ரொம்பவும் சுமாரான ஓட்டலுக்கே 1700₹. அதற்குள் மாலை ஆகிவிட்டதால் வேறு எங்கும் போகவேண்டாமென முடிவெடுத்து, குளிச்சு இரவு உணவு ரூம்லே தர வச்சு சாப்பிட்டேன்.
இந்த ஓட்டல் ஆரப்பாளையம் பேருந்து நிலையத்துக்கு மிக அருகில். மறு நாள் காலைலே மீனாட்சி அம்மன் கோயிலுக்குப் போக முடிவெடுத்து, கணக்கெழுதி முடித்து உறங்கச் சென்றாயிற்று.
(நாள் ஐந்து

கருத்துகள் இல்லை: