சனி, 18 டிசம்பர், 2021

நினைவுகள் பறவைகள்

 நினைவுகள் பறவைகள் போல் அவ்வப்போது பறக்கும்

நிழலாய் கூடவே பயணிக்கும் அருவமாய் உறையும்
சுமைகளாய் சிலவும் சுகங்களாய் சிலவும் கலவையாய்
சுழலும் பூமியில் இரவாய் பகலாய் மாறும்
இருளும் ஒளியும் வலம் வரும் பாதைபோல்
மருளும் மயங்கும் மதியினை இழக்கும் சிலநாள்
கண்களில் மிதக்கும் படகாய் மாறி பயணிக்கும்
விண்ணில் உலாவும் விட்டத்தை நோக்கி மௌனிக்கும்
சொல்ல மறந்த கதைகள் ஆயிரம் இருக்கும்
எல்லைகள் அற்ற பரந்த வெளியாய் பரவிடும்
எனக்குள்ளே புதைந்தே அமைதி கொண்டு உறங்கிடும்

கருத்துகள் இல்லை: