சனி, 18 டிசம்பர், 2021

யாவும் உன்னுருவா

 பெண்ணே உன்னில் மட்டும் இத்தனை அழகா

கண்ணசைவே கோடி என்று சொன்னது யாரோ
நடையழகை அன்னமெனச் சொல்வது எதனாலே எவராலே
இடையழகோ ஒடிந்து விடுமென்று சொல்லி வைத்தாரே
பார்வையில் காந்தமுண்டோ கவர்ந்து செல்லும் மாயையோ
கார்முகில் கூந்தல் பாம்பாய் வளைந்து நெளிந்தா
நிலவைக் கொண்டு முகம் காண வைத்தாயோ
நித்திரை பலருக்கு மறக்கச் செய்து விட்டாயே
தாமரை மொட்டென்றும் சந்தனத் தேரென்றும் சொன்னாரே
பூமகள் நிலமகள் சந்திரன் அனைத்தும் நீதானோ
நளினம் அன்பு அன்னை
யாவும் உன்னுருவா
ஒளிரும் புன்சிரிப்பில் கட்டுண்டு போனேனே பெண்ணே !

கருத்துகள் இல்லை: