சனி, 18 டிசம்பர், 2021

நினைவுகள் சுமந்தே !

 என்னுள்ளே ஏனோ வந்த இசைப் பாட்டு

உன்னோடு நானிருந்த நாட்கள் எங்கே போயின
கண்ணோடு கண்நோக்கி கதை பேசிய நாட்களெங்கே
விண்மீது பயணித்து நிலவுக்குள் புகுந்த மனமெங்கே
சொல்லாத சொல்லுக்கும் பொருள் எழுதிப் போனாயே
பொல்லாத பார்வைக் கணைகள் தொடுத்த வில்லெங்கே
கதைகள் காவியமாய் மாற்றியதும் நீதானே அன்று
விதைகள் முளைத்து விருட்சங்கள் உயர்வாய் இன்று
இதயம் சுமந்து சென்றவளே எங்கே தேடுவேன்
உதயம் வருவதே உன் நினைவுகள் சுமந்தே !

கருத்துகள் இல்லை: