சனி, 18 டிசம்பர், 2021

கார் போன போக்கிலே - 8

 இன்றைக்கு கைட் இல்லை, பாக்க வேண்டிய இடங்கள் அதிகம். காலை உணவுக்குப் பிறகு முதலில் பகோடா பாயிண்டுக்குப் பயணம். பள்ளத்தாக்கு அழகிய காட்சிகள். மக்கள் இன்னும் சுற்றுலாத் தலங்களுக்கு பயணம் செய்ய ஆரம்பிக்கவில்லை. கடைகளும் அதிகம் திறக்கலே. பலூனை துப்பாக்கியால் சுடும் போர்ட் மூன்று சிறுவர்கள் வச்சிருந்தாங்க. போட்டோலாம் எடுத்துட்டு முதல்லே துப்பாக்கி சுடுதல், ஆறு குண்டுலே மூணு பலூனை உடைச்சுது. அடுத்தது வில்,அம்பு புல்ஸ் ஐலே ஒண்ணும் படலே, அதுக்குப் பக்கத்திலே இரண்டு, மற்றதெல்லாம் வெளியே.

அடுத்தது லேடீஸ் சீட். போற வழியிலே மலைப் பிரதேச கிராம்பு,பட்டை,ஏலக்காய்,ஹோம் மேட் சாகலெட்லாம் வாங்கிட்டு அங்கே சென்றப்ப பசுமையான பள்ளத்தாக்கு இங்கும், அதைப் போன்றே ஜென்ட்ஸ் சீட், சில்ட்ரன்ஸ் பாரக் அருகாமையில் மலையுச்சியில் இருந்து கீழே அழகான காட்சிகள்.
முந்தைய நாள் அனுமார் கோயிலுக்குச் சென்றப்ப அது மூடியிருந்ததால் அங்கேயிருந்த தியான மண்டபத்துலே ஐந்து நிமிடம் தியானம்.
அடுத்தது ரோஸ் கார்டன். பூக்கள் மிகக்குறைவு, ஏன் என்று கேட்டேன்.்நீண்ட நாட்கள் மூடித்திறந்திருந்ததால் பராமரிப்பு இல்லாமல் பல செடிகள் பட்டுப் போச்சுனு சொன்னார். இப்ப பராமரிப்பு வேலை செய்ய ஆரம்பிச்சிருக்காங்க. ஏற்காடு பூங்கா இறக்க ஏற்றம் அதிகம், இரண்டு வருடங்களுக்கு முன்பு பார்த்திருக்கிறேன் என்பதால் உள்ளே போகலை.
அத்தோடு அன்றைய பயணத்த முடிச்சுட்டு அறைக்குத் திரும்பிய சில மணி நேரத்துல மழை.
கடைசி நாளான ஒன்பதாவது நாளில் காலைல நம்ம பரோட்டா கடைல சூடா தோசை சாப்பிட்டு பார்க்காத கிள்ளியூர் அருவிக்குப் பயணம். பல வருடங்கள் முன்பு வந்தப்ப இலகுவாக இறங்கிப் போன அந்த இடம் இப்போது மிக அதில் பாதாளத்தில் இருப்பது போல ரொம்ப ஸடீப்பா படிகள். பாதி வழிலே ஒரு சிறுவர் குழு குளிக்காம திரும்பிட்டு இருந்தாங்க. கேட்டபோது தண்ணி கலங்கலா வருது, புதுமழை பெஞ்சுனு சொன்னாங்க, குளிச்சா கோல்ட் புடிச்சுக்கும்னு வேற சொல்லவே, கீழே இறங்கி ஏறது கஷ்டம் வேணாம்னு முடிவு பண்ணி பாதில திரும்பிட்டேன். அதுக்கே மூச்சு முட்டி வேர்த்துக் கொட்டி கார்ல உட்கார்ந்து சிறிது ஓய்வெடுத்து அறைக்குத் திரும்பினேன்.
ஓட்டல் அறையைச் சிறிது ஓய்வுக்குப் பிறகு காலி செய்து, ஏற்காடு மலையிலிருந்து இறங்க ஆரம்பிச்சப்ப பதினொன்றரை. ஒரு நெடும்பயணம் முடிவுக்கு வந்தது. எங்கும் நிற்காம ஓசூருக்கு அருகே பெட்ரோல் நிரப்பி, பெங்களூரு வீட்டை அடைஞ்சப்ப நாலே கால்.
இரண்டாயிரம் கிமீ பயணம் தனி ஒருவனாய் பயணித்த அனுபவம். நண்பன் அந்தோணி சொன்னது போல தனிமையிலே இனிமை காணலாம்னு ஒரு ஃபோல்டர்லே போட்டோக்களை சேமிச்சேன். பயணம் முழுதும் சிங்கப்பூரிலிருந்து மானசீகமாக என்னோடு பயணித்த சம்பந்தம், வருகிறோம் என்று சொல்லி வராமல் போன அந்மோணி, இராஜேந்திரன், வீட்டிலே விசேஷங்கனு வராம விட்டுட்டுப் போனதுக்கு கோபப்பட.ட அசோக், அப்பப்ப பயண டிப்ஸ் கொடுத்த பங்ஸ் சிவராஜ் இவங்கலாம் எனக்கு ஊக்க மருந்து.
இந்தப் பயணம் முடிந்தாலும் மற்றொரு பயணம் இன்று இரவு தொடக்கம், அது என்னவென்று தெரிய ஐந்து நாட்கள் பொறுத்திருக்கவும். பயணங்கள் முடிவதில்லை.
(முற்றும்)

கருத்துகள் இல்லை: