சனி, 18 டிசம்பர், 2021

வந்தனை செய்வோம்

 சந்தம் என்பது கவிதைக்கு அழகாம்

பந்தம் அதுவே உறவுக்கு அழகாம்
சாந்தம் கொள்வது மனதுக்கு அழகாம்
காந்தம் என்பதோ ஈர்ப்புக்கு அழகாம்
சொந்தம் இருப்பதோ உதவிக்கு அழகாம்
வந்தவர் யாவரும் போவதும் விதியாம்
நொந்திட வேண்டாம் இதுவும் கடந்திடும்
தந்தவன் எவனோ அவனே இறையாம்
அந்தம் என்பதோ முடிவின் பொருளாம்
நிந்தனை செய்வதை தவிர்ப்பதே நலமாம்
வந்தனை செய்வோம் இறையெனக் கொள்வோம்
பந்தெனச் சுழன்று பணியினைச் செய்வோரை
வந்திடும் நல்லதோர் நாளும் விரைவில்
நம்பியே நாட்களை நாமும் கடப்போம்

கருத்துகள் இல்லை: