சனி, 18 டிசம்பர், 2021

இயற்கைச் சுற்றுலா -3

 டண்டேலி (இயற்கைச் சுற்றுலா)

இன்றே கடைசி, காலையில் வழக்கம் போல நீச்சல் குளம். முந்திய நாளே ஓரளவு பேக்கிங் முடிஞ்சதாலே, குளித்து ரெடியாகி, டெண்ட்டை வெகேட் செய்து, காலை உணவை முடித்த போது பத்தே கால் ஆயிற்று. ரிசார்ட் விட்டுக் கிளம்பி கரடு முரடான பாதையில் டாக்ஸி போக, ஹார்ட்லியில் அருண் தொடர, ஈகோ பார்க் விஜயம்.
இது குழந்தைகளுக்கான பார்க் போல ஊஞ்சல், தொங்கு பாலமென மரங்களினூடே அமைந்திருந்தது. நிறைய நாட்கள் மூடி இருந்ததால் பொலிவிழந்து காணப்பட்டது.்காளி ஆறு வேகத்துடன் ஓடிக் கொண்டிருந்தது். எங்கெங்கு காணினும் சக்தியடா என்பது போல காளியாறு டண்டேலியை தன் வசம் வைத்திருந்தது. இந்த பார்க் காதலர்களுக்கும் தனிமை விரும்பிகளுக்கும் ஏற்ற இடம்.
நாங்களும் சிறியவர்களாக மாறி ஊஞ்சலில் ஆடிவிட்டு, கீழே இறங்கி ஆற்றின் ஓட்டத்தைப் பார்த்து ரசித்து, வெளியே வந்தோம். காரமான மசாலா மோரைக் குடித்து விட்டு, பரத்தை வழியனுப்பத் தயாரானோம். ரைடிங் கியர். அணிந்த பிறகு கிளிக்கி வழியனுப்பி வைத்தோம்.அவ்வப்போது மெசேஜ் அனுப்பு புனே சேரும் வரைனு சொல்லி அனுப்பினோம்.
நால்வர் மூன்றாகி முதலை பார்க் அடுத்த விஜயம். இருபத்தைந்து ₹ ஆளுக்கு கொடுத்து எங்கோ தொலைவில் ஆற்றுப் படுகையில் ஒளிந்திருந்த ஐந்து முதலைகளைக் காண இது தேவையா என மனதில் கேள்வி. வெளி வந்து கரும்புச் சாறு அருந்தி, டண்டேலி நிசர்கா ஆபீஸில் ரிசார்ட் ஃபீட் பேக் கொடுத்து பசவப்பாவுக்கும் விடை கொடுத்து தார்வாட் பஸ்ஸில் மறுபடி கரடு முரடான சாலையில் சில இடங்களில் பயணித்து, மதிய உணவு முடித்து,தாகூர் பேடா வாங்கிக் கொண்டு, பேருந்துப்பயணம் ஹூப்ளி நோக்கி.
இந்தப் பயணம் அழகானது. மெட்ரோ ரயில் போலவே பஸ் நிலையங்களில் பஸ் நிற்க, கதவுகள் திறந்து பயணிகள் ஏறவும் இறங்கவும்,பார்க்க புதுமையாக இருந்தது. BRT என்று அழைக்கப்பட்டு தனிப்பாதையில் பேருந்துகள் வருவதும் போவதும், நல்லதொரு அமைப்பு, வெளிநாடுகளில் கூடப் பார்த்ததில்லை. தார்வாட் ஹூப்ளி பயணம் அருமை.
இரயில் நிலையத்தில் லக்கேஜ் குளோக் ரூமில் வைத்து விட்டு, இரயில் புறப்படும் நேரம் இன்னும் ஐந்து மணிக்கு மேல் இருந்ததால், IRCTC கேண்டீனில் காப்பி அருந்தி, இரவு அங்கேயே இட்லி சாப்பிட முடிவெடுத்து, ஆட்டோவில் பயணித்து ஓயாசிஸ் ஷாப்பிங் மாலில், சினிபோலிஸ் திரையரங்கில் Jungle Cruise 3D படம். விறுவிறுப்பான பேன்டசி படம், உலக மக்களுக்கு நோயற்ற வாழ்வளிக்கும் ஒருவகை பூ அமேசான் காட்டில் பல இடையூறுகளுக்குப் பிறகு அடையும் காதல் ஜோடி.
மீண்டும் இரயில் நிலையம் அடைந்து, இரவு உணவருந்தி, இரயில் 06590 பயணித்து, யெஷ்வந்த்பூரில் இறங்கி, (குறிப்பிட்ட நேரத்துக்கு முன்னதாகவே அடைந்த இரயில்) விடை பெற்று அவரவர் வீடு நோக்கிப் பயணித்தோம். மீண்டும் குடும்பத்திருடன் சாலை மார்க்கமாகப் பயணித்து டண்டேலி செல்ல வேண்டுமென முடிவுடன்.இயற்கையோடு ஒன்றிய பயணங்கள் தொடர்ந்து கொண்டே இருக்கும்.
( முற்றும் )

கருத்துகள் இல்லை: