என்னோடு வருவதற்கு நானிருக்கிறேன் தயக்கமில்லை
எண்ணியது முடித்தல் நன்றுதானே சொல்வீர்
இன்றில்லை எனில் என்றோ செய்வது
இனியொரு நாள்வரும் என்பதே தவறு
பயணம் தொடரும் பாதைகள் தோன்றும்
பலவகை அனுபவம் பட்டே அறிவோம்
கற்றது ஒன்றெனில் கண்டது வேறல்லவா
நற்றமிழ் நாவினில் தவழும் நாளுமே
பெற்றது பெரும்பயன் கல்வியின் அணைப்பில்
சுற்றமும் நட்பும் சூழ்ந்திட வாழ்வோம்
இயற்கை என்பதே இறைவனாய் ஆகுமோ
இதுவே வினாவாய் பலரது மனதில்
நல்லதே செய்க நன்மை விளையும்
அல்லது விடுத்து அன்பு கொள்க
வாழ்க்கை என்பது வட்டப் பாதையே
வாழ்ந்திடு வஞ்சனை உளமதில் அகற்றி !
இராமேஸ்வரம்
3/9/21
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக