நேற்று இரவு பெய்த மழையின் குளிர் காற்று
விடிந்து வெகுநேரம் ஆனாலும் படுக்கையைத் துறக்க மனமில்லை
பறவைகளின் கலப்புச் சத்தம் காதுகளில்
ரமலான் வாழ்த்துகளும் அட்சய திருதியை வாழ்த்துகளும் குவிந்த வண்ணம்
பூமி விழிக்கவில்லை போன்ற அமைதி
உள்ளத்தில் பலவித எண்ண ஓட்டங்கள்
கபீர் அண்ணனின் வீட்டு பிரியாணி வாசம் பெங்களூரு வரையிலா
மீண்டும் போர் மேகமா ஓயாத அரபு எல்லையில்
புத்தர் அமைதியாய் கடல் நோக்கி அமர்ந்திருக்கிறாரா சுரேஷின் வீட்டுத் தோட்டத்தில்
மேற்குத் தொடர்ச்சி மலையோரம் கலை கடல் காற்றையும் மழை ஈரத்தையும் சேர்ந்தே சுவாசிக்கிறாரா
அக்னியின் தாக்கம் அதிகமாய் சென்னையில் பெங்களூரும் திருவனந்நபுரமும் மழையைத் திசை திருப்பி அனுப்பி வைத்தால் நலமல்லவா
விடிவெள்ளி உலகில் தோன்றி விரைவில் உலகம் சுகப்பெறும் எனும் குரல் காதுகளில் கேட்கிறது
தொலை தூரத்து மலைச்சிகர மரமொன்று அசைந்து ஆமோதிக்கிறது
காற்று கடல் நதி மேகம் கதிரவன் நிலா நட்சத்திரக் கூட்டம் அதனதன் பாதையில்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக