விதைகள் மரமாவது உண்டு
வினைகள் பயனாவது உண்டு
உழைப்பு உயர்வே இங்கு
உள்ளம் கருணை கொண்டு
கண்ணீர் துளிகள் உண்டு
கடவுள் அவராவது உண்டு
சொல்லாத செயல்கள் உண்டு
நல்லதோர் வாழ்விற்கு தொண்டு
சான்றோன் ஆக்குதல் உண்டு
சார்ந்த குடும்பம் கண்டு
ஓயாத உழைப்பும் உண்டு
ஓரங்க நாடகம் போன்று
தோளில் பாரம் சுமந்து
தோழனாய்க்கூடவே நடந்து
வாழ்நாளும் கடந்து போகும்
வாடாத முகமே தந்தை
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக