சனி, 18 டிசம்பர், 2021

பழைய நினப்புடா

 அறமென்றால் என்னன்னு கேப்பாங்க இப்ப.

சின்ன வயசுலே கிராம வாழ்க்கைய வெகுவாக உள்வாங்கியதாலே ஞாபகம் இருக்கு
தெரு முச்சூடும் உறவுகள் தான். கரடின்னு அப்பாவ மாமனுங்க கூப்புடுவாங்க. தெருக்கூத்து நாடக ஆசிரியரா, கொஞ்சம் படிச்ச மனுசனா, போலீஸ்காரர்னு, அவரோட மூத்த பிள்ளையா என்ன புடிக்கும்.
யார் வீட்டில் சாப்புடறதுனு குழப்பம் வரும். களி, கூழுன்னு சாப்பிடறவங்க பட்டணத்துப் பையனுக்கு கைக்குத்தல் அரிசியும், முள் கத்தரிக்காய் சாம்பாரும் தேக்கு இலைலே சாப்பிடறது சுவை. எல்லாமே கிராமத்து விளைச்சல்.
கோடைன்றதாலே நுங்கு, மாங்கா எல்லாமுண்டு. ஆட்டுப் பால் மோரு, வேர்க்கடலை, இளநீரு கிடைச்சுட்டே இருக்கும்.
ஏரிலேயோ (கடல் போல) கிணத்துலேயோ மீனை புடிச்சு, காஞ்ச தென்னை மட்டைல சுட்டு, அங்க விளையற பச்ச மிளகாவ நசுக்கி, உப்பு சேத்து சப்புக் கொட்டி சாப்பிடறது சுகம்.
தண்ணி ஓடற ஓடைக் கரையோரம் பெருசுங்க சாராய ஊறல குடிக்கறத இரகசியமா செய்வாங்க. அதுக்கு தொட்டுக்க உடைச்சகடலை,பூண்டு, மிளகாய்த்தூள் கலந்த ஒரு கலவை.
இப்படி எத்தனையோ, பழைய நினப்புடா பேராண்டி.

கருத்துகள் இல்லை: