[14/06/21, 10:45AM]
தாயின் கரு துறந்து வாழ்வில் உருண்டு புரண்டு
மாய வலை சிக்கி மனது சிதறி சிக்குண்டு
காயமே இது பொய்யடா என்றொரு சித்தாந்தம் பேசி
சேயது செய்யும் வினை நோக்கி நாளதும் செருக்குண்டு
வாயது கட்டி வயிறு வளர்த்து வயதும் வளர்ந்து
நோயது பற்றி நெஞ்சு வலித்து கண்கள் பனித்து
மாயமே உலக வாழ்வு எனத் தெளிந்து உணர்ந்து
போயது சேர்ந்தாயோ மனிதா இறைவன் திருவடி தன்னை !
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக