இரவு வந்தது நிலவும் வந்தது
விடியல் வந்தது இருளும் போனது
கனவு வந்தது காட்சி வந்தது
விழி திறந்தது கலைந்து போனது
காதல் வந்தது காதலி வந்தாள்
காலம் மாறியது கரைந்து போனது
சுழன்றது தினமும் கோள்களும் பூமியும்
புதிராய் ஆனது புதிய நுண்ணுயிர்
உருவம் மாறியது உயிரைத் துளைத்தது
இறைவா சின்னப் புள்ளி் நான்
இத்தனை சோதனை தாங்குமோ என்மனம்
விடுகதை வாழ்க்கையா விடையொன்று உண்டா ?
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக