சனி, 18 டிசம்பர், 2021

விழி மூடுமா ?

 எங்கோ தொலைந்ந ஒன்று எதிலோ விழுந்து எழுந்து

என்றோ மறைந்த தென்று மறந்து போன நினைவு
மீண்டும் முளைத்து வருமோ கிளைகள் வளர்ந்து வருமோ
கண்கள் மூட மறந்து கனவாய் தோற்றம் தருமா
சொல்லத் தெரியா கதையா தெள்ளத் தெளிவாய் இல்லையா
சொற்கள் சுகமாய்த் தோன்றுமா சொக்கிப் போகும் மனமா
சுற்றுவது நானா சுழலும் பூமியும் தானா ஐயமே
பற்றும் துறந்து போனது பட்டுப் போகலை என்பதா
விட்டுப் போனதன்று விதையாய் ஊன்றிப் போனதெனச் சொல்வதா
விடை தெரியாமலே உறக்கம் வருமா விழி மூடுமா ?

கருத்துகள் இல்லை: