சனி, 18 டிசம்பர், 2021

ஒற்றுமை நம்மில் ஓங்கட்டும்.

 நிஜமாகவே நல்ல மனிதர்களும் பெருகணும். பணம் தன்னோட வரதில்ல, உயிர் பிரிஞ்சா மண்ணோட மண்ணா பாழாப் போற உடம்பு, கரோனா வந்தா சொந்தங்களே அனாதைப் பிணமா விடற அவலங்கள், பணத்த வச்சு ஒரு மசுரும் பண்ண முடியாத நிலை, சாதி மதம் நிறம் எதுவுமே உதவாத நிலை, மனித வாழ்க் கையை புரிய வச்ச நுண்ணுயிரே வாழ்க இதற்காக மட்டும்), தீயவை பாடம் கற்பிப்பது இப்படித் தான்.

எல்லாவற்றையும் விட்டு விடுங்கள. எல்லா தலைவர்களும் ஏதோ வகையில் மக்களுக்கு நல்லவை செய்திருக்கிறார்கள்.
நல்லவற்றை எங்கிருந்தாலும் போற்றுவோம். நாளை நடக்கும் தேர்தல்களில் நாட்டு முன்னேற்றத்தை முன்னிறுத்தி வாக்கைக் கேட்போம்.தீய வழியில் பணம் கொட்டினாலும் தொடுவதில்லை என்றும் மக்கள் நலனே கொள்கை என்றும், நியாயமான வழியில் எனக்குச் சேர வேண்டியது மட்டும் பெற்றுக் கொள்வேன் என்றும் உறுதி கொள்வோம். சமுதாய ஏற்றத் தாழ்வுகள் களைகின்ற முடிவுகளை முழுமனதோடு ஏற்போம்.
ஒற்றுமை நம்மில் ஓங்கட்டும். காலம் சுழன்று கொண்டே இருக்கும்.

கருத்துகள் இல்லை: