செல்லப் பிள்ளையாய் தாயாய் சிறுவயதில்
நல்ல மாணாக்கனாய் தமிழில் ஆர்வமேற்றி
சதாசிவமென்றும் குருசாமியென்றும்
தகைசால் ஆசிரியப் பெருமக்கள் அனைவர்
பிரம்படியும் குட்டும் படாமலே அறிவேற்றி
பிதாமகர் பலருண்டு ஏற்றிவிட்ட ஏணிகள்
உயர்வதை ரசித்தே உவகை கொள்வர்
முயற்சி திருவினை ஆக்கல் கற்பித்தவர்
வார்த்தைகள் வணக்கங்கள் போதாது வணங்கிட
வாத்தியார் தெய்வமெனப் போற்றிட ஒருநாளா
மானிடம் உளநாள் வரையில் மனதினில்
மாசற்ற அவர்பணி நினைவில் நிறுத்துவோம் !
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக