வியாழன், 12 ஜூன், 2025

மழலைத் தமிழே

 கடலின் ஆழத்து முத்தாய் தமிழ்க் கடலில் மூழ்கியெடுத்த வெண்முத்து

உடலின் உயிராய் உதிர ஆறாய் ஊடுருவிப் பாயுமது
உணர்வுக் கோர்வை உள்ளத்து ஊற்றில் பெருக்கெடுத்த அருவி
கணக்கற்ற கனவுகள் கற்பனைச் சோலைகள் உதிர்க்கும் வண்ண மலர்கள்
எங்கெங்கோ சுற்றி வந்து வெள்ளைத் தாளில் நீல வண்ணத்தில்
சங்கம் வளர்த்த மண்ணில் தோன்றிய அழியாச் செல்வமும் ஆகுமது
சொல்லில் தோன்றும் பொருளில் வீரம் செறிந்த போர் வாளுண்டு
கல்லும் கரையும் என்பர் பாடலாய் உணர்வு ஊட்டிய வரிகளால்
எழுதக் குறையாத அமுத சுரபியாய் காலம் கடந்தும் வாழும்
என்னுள்ளே கருவாகி உருவாகி கவிதையாய் மழலைத் தமிழே வாழ்கவே !

கருத்துகள் இல்லை: