வியாழன், 12 ஜூன், 2025

சென்றவள் வருவாளா

 அவள் வருவாளா எங்கோ சென்றவள் வருவாளா

அருகே இல்லை தொலை தூரம் சென்றாளே
எத்தனை ஆண்டுகள் எண்ணம் மட்டும் சிதறாமலே
பித்தனாய் மனமோ பேதலித்த சில நேரங்கள்
குற்றம் செய்தது அவளல்ல காலத்தின் கோலம்
உற்றார் செய்த தவறோ ஊழ் வினையோ
முதலில் வந்த காதல் முழு மனதில்
முடியாத கதையாய் தொடர இல்லை முற்றும்
வாலிபக் காதல் என்பது வயோதிகம் வரையோ
வலிய வந்தவளே மலைநகர் போனது ஏனோ
சொன்ன என் மனதே கேள்விகள் தொடுத்தது
கன்னத்துக் கண்ணீரை கடிதம் சுமந்த நாட்கள்
நீரில்லா வற்றிய கண்களில் கதைகள் எத்தனையோ
வேரில்லா மரமாய் வாடிய உள்ளம் எங்கேயோ ?

கருத்துகள் இல்லை: