அயலகப் பயணம், சிங்கப்பூர் & தாய்லாந்து, 11/11/24 ,12/11/24
நண்பர் சம்பந்தம் 6/11 ஏர்போர்ட் வந்து அழைத்து வந்ததிலுருந்து, தன்னுடன் தங்க வைத்தது மட்டுமில்லாமல், கூடவே பல இடங்களுக்கும் துணையாக வந்தார். எப்போதுமே நட்பின் இலக்கணம் அவரிடம் கற்றுக் கொள்ள வேண்டும். ஐம்பது வருடங்களுக்கு மேலாக அவரது குடும்பத்தில் ஒருவனாகவே என்னை ஏற்றுக் கொண்டவர். என்னை செலவு செய்யவே அனுமதிக்கவில்லை. இப்படியொரு நட்பு அமைவது கடினம்.
நண்பரிடம் காலையில் விடைபெற்று ஏர்போர்ட் கிளம்பிய போது மனம் கனத்தது. ஏர்போர்ட் சென்று செக் இன் செய்து, நிறைய நேரமிருந்த்தால், எதிரில் உள்ள Jewel Garden ல் நுழைவுச் சீட்டு பெற்று, சுற்றிப் பார்த்தபோது மிகப் பிரம்மாண்டமான பசுமைத்தோட்டம். அதனைப் பார்த்து முடித்து, சரியாக பதினொரு மணிக்கு செயற்கை நீர் வீழ்ச்சி, இசையோசையுடன். Terminal 1,Jewel Garden சுற்றுலாத் தளமாகவே மாறி விட்டது.
இமிக்ரேஷன் மிகச் சுலபமாய் முடிய செக்யூரிட்டி செக் முடித்து காத்திருப்புக்குப் பின், பாங்காக் ஃபிளைட்டில் பயணித்து, ஏர்போர்ட்க்கு வந்த டாக்ஸி டிரைவர் உதவியுடன், நான் புக் செய்திருந்த சுவர்ணபூமி ஓட்டலை ( சுவர்ணபூமி என்பது ஏர்போர்ட் பெயரும் ஆகும்) அடைந்த போது மாலை நேரமாகி விட்டது. அப்போது தான் தெரிந்தது, நகரின் வெளியே ஓட்டல் இருப்பதால் எங்கும் செல்ல இயலாது என்பது. அருகிலுள்ள ராபின்சன் மார்க்கெட்டில் முழுதும் அலைந்த போதும் இந்த ஊர் பவர் Adaptor நமது ஊர் plugku ஏற்றவாறு கிடைக்கவில்லை. சில நூறு பாட்கள் ( Bhat) செலவாகியும் Lap top உபயோகிக்க முடியவில்லை. நான் இதை கவனத்தில் கொள்ளாதது எனது தவறே. வெவ்வேறு நாடுகளில் Voltage, Socket type. மாறும் என்பது தெரிந்தும் கவனத்தில் கொள்ளவில்லை.
இரவு உணவு தங்கியிருந்த ஓட்டலுக்கு அருகிலேயே முடித்தாயிற்று. இந்திய ரூபாய் 2.9 ஒரு பாட்க்கு சமம் என்பதால், எல்லாமே நமது ஊருக்கு மிக அதிக விலையெனத் தோன்றியது. சிங்கப்பூரில் 66 ரூபாய்க்கு மேல். 2005ல் நான் சென்ற்போது 32/33 ₹ ஒரு சிங்கப்பூர் டாலர்.
காலையில் பாங்காக்கின் மற்றொரு விமான நிலையமான ( பெரும்பாலும் Domestic) DMK airportக்கு டாக்ஸியில் பயணித்து, மீண்டும் கிரபிக்கு( Krabi) விமானப் பயணம். கிரபி ஏர்போர்ட்டில் டாக்சி டிரைவர் காத்திருந்தார். IBIS Styles ஓட்டலில் அறை புக் செய்யப்பட்டு இருந்தது. தாய்லாந்து பயணம் முழுவதும், நண்பர் சிவராஜின் வழிகாட்டுதலில், பன்னா என்ற இந்திய வம்சாவளி மனிதர் தாய்லாந்து பெண்ணை மணந்து, இவ்வூர்க்காரராக மாறியிருந்தார், அவரிடம் ஒப்படைக்கப் பட்டது.
பிற்பகல் ஓட்டலுக்கு வந்து சேர்ந்ததால், பயணம் ஏதுமில்லை. மாலையில் கடை வீதி வழியாக நடந்து கால் வலி போக்க, Foot Massage செய்த போது பொதுவாக இந்தியாவை விட மற்ற தெற்காசிய நாடுகளில் மசாஜ் கட்டணம் குறைவே என்பது தெரிந்தது. மீண்டும் ஓட்டலை அடையும் முன் இந்திய உணவை டின்னருக்கு சிறிய மெஸ் ஒன்றில் சாப்பிட்டபோது நன்றாகவே இருந்தது.
அதற்குள் மறுநாள் செல்ல வேண்டிய இடங்களும், என்னென்ன எடுத்துச் செல்ல வேண்டுமென்றும் டூர் ஆர்கனைசரிடமிருந்து, வாட்ஸப் மெசேஜ் வந்த்து. தயாராய் சிறிய பேக் ஒன்றில் தண்ணீரில் குளிப்பதற்கு வசதியான ஆடைகளை அடைத்து, மறுநாளை நோக்கி, உறக்கம் அழைத்தது
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக