அயலகப் பயணம், சிங்கப்பூர் & தாய்லாந்து, 13/11/24
கிரபி என்பது நகரின் பெயரானாலும், தங்கியிருந்த இடத்தின் பெயர் அவ் நங் ( AO NANG) என்பதாகும்
காலை உணவுக்குப் பிறகு , சுற்றுலா ஆர்கனைசர் ஒவ்வொருவராக பிக் அப் செய்து, ஜங்கிள் டூர் என்ற மூன்று வெவ்வேறு இடங்களைக் காண வேனில், மேற்கத்திய நாட்டாரோடு பயணம் தொடங்கியது. National Park Fee என்று 650 Bhat டிக்கெட் மூன்று இடத்திற்கும் சேர்த்து, இது பேக்கேஜ் கட்டணத்தில் சேர்க்கப் படவில்லை.
அடுத்த இடமாய், Emerald Pool என்ற தூய நீர் குளமொன்றில் குளியல். ஆழம் ஐந்தடியில் இருந்து ஐந்தரை அடி வரை. நிறைய இந்தியர்களைக் காண ( தமிழர்கள் உட்பட) முடிந்தது. தாய்லாந்தில் எங்கு சென்றாலும் இந்தியர்களே அதிகம். குளித்து முடித்து ஈர உடை களைந்து, உலர் ஆடை அணிந்த பிறகு, அருகில் உள்ள ரெஸ்டாரெண்டில், இந்திய உணவு தயாராய் இருந்தது. அனைவருக்கும் டோக்கன் வினியோகம் செய்திருந்தனர்.
சிறிது ஓய்வுக்குப் பிறகு மீண்டும் பயனித்து, மூன்றாவது இடமான டைகர் கேவ் பயணம். மிக உயரமான மலை மீது தங்க நிற புத்தர் சிலை. 1260 படிகள் செங்குத்தானவை. என்னைப் போன்ற சிலரைத் தவிர மற்ற அனைவரும் மிக்க சிரமத்துடன் படியேறிச் சென்று வந்தனர். அப்படிச் சென்று வந்த UK Couple என்னருகே சீட்டில் அமர்ந்ததால் அவர்களிடம் வாட்சப்பில் போட்டோஸ் பெற்றுக் கொண்டேன். Zak and Anna நல்ல இணை.
நான் கீழே உள்ள புலிக் குகை, புத்தர் சிலைகள் முதலானவற்றைப் பார்த்து மற்றவருக்காக்க் காத்திருந்தேன். புலி ஒன்று நிஜமாகவே அந்த மலைப் பிரதேசத்தைக் காவல் செய்ததாக சிலை ஒன்றை வைத்திருந்தனர் குகைக்குள்.
சுற்றுலா முடிந்து ஓட்டலுக்குத் திரும்பி ஓய்வெடுத்து, கடற்கரைக்குச் சென்று வேடிக்கை பார்த்தபடி, போட்டோக்கள் எடுத்து, மாலை மங்கியதும் திரும்பி, முன்னதாகவே இரவு உணவை மெஸ் போன்ற இந்திய உணவகத்தில் சாப்பிட்டு, Foot Massageம் செய்து கொண்டு அன்றைய நாள் முடிந்தது. மறுநாள் புக்கெட் ( Phuket) பயணம் காலை விரைவாக காலையுணவை முடித்து வேன் பிக்கப்புக்கு, காத்திருந்தேன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக