ஓடிய கால்கள் ஓய்ந்து சாய்வு நாற்காலியில்
ஆடிய பாதங்கள் அமர்ந்து வானம் பார்த்து
சிந்தனை ஆயிரம் சிதறிய எண்ணங்கள் பலவாய்
விந்தை உலகம் இதுவே என்ற கூற்றாக
பந்தம் பாசம் சொந்தம் நட்பு என்றவை
பற்றற்ற வாழ்க்கை வெற்று இடமாய் மாறிடும்
சுற்றம் சூழவே வாழ்ந்திட தனிமை போக்கிடும்
உலகம் சுற்றிடு உயிரை நேசித்து உதவிடு
உனக்கான பாதையில் உலவச் சென்று பார்
கனவுகள் கற்பனை ஊற்றாக கவிதை படைத்திடு
காலச் சக்கரம் சுழன்றே உடன் வரும்
காலனின் நாட்கள் கணக்கில் ஏடுகள் புரளும்
ஞாலம் பரந்தது பசுமைப் போர்வை எங்கும்
ஞானம் பிறக்கும் வேதனை மறைந்து போகும்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக