தபால்காரர் கொண்டு வந்த கடிதங்கள்ளே நல்லதும் உண்டு கெட்டதும் உண்டு. வாழ்க்கையைப் புரட்டிப் போட்ட விஷயங்களும் உண்டு.
எல்லாவற்றுக்கும் சாட்சியாகவும் பல நேரங்கள்ளே அதை யாரும் பாக்கக் கூடாதுன்ற பயம் கூட.
அவள் எழுதிய கடிதங்கள் என்னோட மேசை டிராயருக்குள் ஒளிக்கப்படும். எப்படியோ கண்டு புடிச்ச அப்பா அதை
இன்று போல் வாட்சப் இருந்திருந்தால், பெற்றோருக்குத் தெரியாம காதல் வளர்ந்திருக்கலாம். ஒருவேளை பட்டுப் புடவை உடுத்திய அவளோடு நான் மாங்காடு கோயிலுக்குப் போயிருக்கக் கூடும்.
அவள் கொடுத்திருந்த வாழைச்சீப்பு தாலியை அவள் கட்டச் சொல்லியிருப்பாளோ ?
அப்பாவின் பிரம்படிகள் அவளது அழுகை, கண்ணீருடன் அவள் சொன்ன அந்த " அவரைத்தான் கட்டிப்பேன்" என்ற மலையாளம் கலந்த தமிழ் வார்த்தைகள் வராமலே போயிருக்கலாம்.
மலைதேசம் சென்ற பிறகும், நான் சென்னையைத் துறந்து பெங்களூர் சென்ற போதும் என்னிடம் சேர்த்த நண்பர் அசோக்கை நினைவு கூறாமல் போயிருக்கலாம். பதில் எழுத முடியாமல் கைகள் கட்டப்பட்ட பிராமிஸ் காதலுக்கு முற்றுப்புள்ளி வைத்த நிகழ்வும் நடவாமல் இருந்திருக்கும். கடிதங்கள் நைந்து கிழிந்த பிறகு ஏதோ குப்பையோடு மறைந்தே போயின.
பெரியப்பா, மாமா என்று காலஞ்சென்றவர் கையெழுத்துகள், அறிவுரைகள், அதட்டல்கள், பாசம் எல்லாவற்றையும் சுமந்து வந்து சேர்ந்த நேரங்களில் மனதில் ஏற்பட்ட மாற்றங்கள், குழப்பங்கள்.
காலம் தான் எப்படி மாறி விட்டது, தபால்காரர் பார்வையிலிருந்து மறைந்தே போனார். நினைத்த நொடிகளில் உலகின் எந்த மூலைக்கும் செய்திகள் சேர்கிறது. கட்டணமில்லா, தாமதமில்லா அழைப்புகள் சாத்தியம். அன்பானவர்களைப் பார்த்த படியே பேச முடிகின்ற மாற்றம்.
காலம் உருண்டோடிக் கொண்டே இருக்கும். தலைமுடி, மீசை நரைத்த படி கைபேசியில் இத்தனையும் பதிவிட முடிகிறது இப்போது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக