காற்று உள்ள போதே தூற்ற வேண்டுமாம்
சற்றே இங்கே வீசிட வருவாயா விரைவில்
அன்றே போன அவளிடம் தூதொன்று செல்வாயா
நின்றே கொல்லும் மனதை நினைவறச் செய்வாயா
என்றோ தொலைந்த பொருளைத் தேடுதல் நன்றோ
கண்ணோடு போனது கனவாக மாறிடத் தானே
விண்ணோடு போன மேகமும் உன்னோடு வருமோ
கடிதம் சுமந்த வார்த்தைகள் காற்றே உன்னோடா
விடிந்த இரவின் ஒளியில் விடையும் உண்டோ ?
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக