வியாழன், 12 ஜூன், 2025

தவறா

 கண்ணைப் படைத்து பெண்ணைப் படைத்தது ஆண்டவன் தவறா

விண்ணைப் படைத்து விண்மீன்கள் படைத்தது அதுவும் தவறா
கண்கள் காணும் தோற்றங்கள் யாவும் அழகானால் தவறா
கற்பனை ஊற்றாய் கவிதைகள் தோன்றுதல் கவிஞனின் தவறா
சிற்பிகள் செதுக்கிய வளைவுகள் நெளிவுகள் உளிகளின் தவறா
சிந்தனை ஆயிரம் சிதறிய கனவுகள் இரவின் தவறா
இன்பமும் துன்பமும் கலந்ததே வாழ்க்கை என்பதும் தவறா
இயற்கை என்பதே ஊகிக்க முடியாத ஒன்றானது தவறா
வருவதும் போவதும் வாழ்வின் நிகழ்வு பிரிதல் தவறா
வரமாய் வலியாய் மாறிடும் சுழற்சி என்பது தவறா
கணக்காய் வகுத்த கடவுளின் செயலாய் காண்பது தவறா
கலக்கம் எதனால் மனதில் தினமும் மானுடர் வாழ்வில்
கலைந்து போகும் மேகங்கள் போலவே கடந்து போகும்

கருத்துகள் இல்லை: