கண்ணைப் படைத்து பெண்ணைப் படைத்தது ஆண்டவன் தவறா
விண்ணைப் படைத்து விண்மீன்கள் படைத்தது அதுவும் தவறா
கண்கள் காணும் தோற்றங்கள் யாவும் அழகானால் தவறா
கற்பனை ஊற்றாய் கவிதைகள் தோன்றுதல் கவிஞனின் தவறா
சிற்பிகள் செதுக்கிய வளைவுகள் நெளிவுகள் உளிகளின் தவறா
இன்பமும் துன்பமும் கலந்ததே வாழ்க்கை என்பதும் தவறா
இயற்கை என்பதே ஊகிக்க முடியாத ஒன்றானது தவறா
வருவதும் போவதும் வாழ்வின் நிகழ்வு பிரிதல் தவறா
வரமாய் வலியாய் மாறிடும் சுழற்சி என்பது தவறா
கணக்காய் வகுத்த கடவுளின் செயலாய் காண்பது தவறா
கலக்கம் எதனால் மனதில் தினமும் மானுடர் வாழ்வில்
கலைந்து போகும் மேகங்கள் போலவே கடந்து போகும்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக