திட்டமிடாத ஒன்று நடந்து அது நமக்குப் பிடித்ததாகவும் அமைந்து விட்டால் ஒருவித மகிழ்ச்சி மனதில் தோன்றும். 14/9 அன்று நண்பர்கள் குணா, அசோக், இராஜி மூவரையும் மதுரவாயல் டோல்கேட்டில் பிக் அப் (காலை எட்டு மணிக்கு ) செய்து பைபாஸ் சாலையில் கார் வேகமெடுத்தது. பள்ளித்தோழன் இரவி சொன்ன தல கோனா அருவிக்கு கூகுள் மேப் போட்டபோது திருப்பதிக்கு அருகே மூன்று மணி நேரப் பயணம் எனக் காட்டியது. முன் வைத்த காலை பின் வைப்பதில்லை என்பது போல கார் போய்க் கொண்டே இருந்தது. பைபாஸில் இருந்த நெடுஞ்சாலை தொட்டபோது சாலை பராமரிப்பு, மேம்பால பணி, லாரிகள் என பயணம் தாமதமானது. நேரம் விரயமானது மட்டுமல்ல, கூகுள் வழி காட்டுதலும் தவறாகி தவறான பாதை போன்று தோன்றியது. காலை உணவுக்கான நேரம் தவறி விடுமென்று ஆனந்த பவனில் நிறுத்தி இடமின்மையால் வேறு ஓட்டலுக்குச் சென்றபோது அங்கும் கூட்டம். முதலாளியே பரிமாறத் தொடங்கினார்.
வியாழன், 12 ஜூன், 2025
பயணங்கள் என்னோடு இணைந்தவை
ஒரு வழியாக காலையுணவு முடித்து மீண்டும் பயணித்தபோது நேரமும் கிமீ ஓடிய போதும் தல கோனா சென்று சேர மாலை நேரமாகிவிடும் எனத் தோன்றியதால், கூகுள் உதவியை மீண்டும் நாடினோம். அப்போது கைலாச கோனா அறுபது கிமீக்குள் என்றது. உடனே அங்கே செல்வது் எப்படியும் போகிற வழிதானே, நீரி்ல்லாமல் போனால் யோசிப்போம் என சமயோசித முடிவெடுத்து, மேப் இப்போது தல என்பது மாறி கைலாச கோனாவுக்கு் திரும்பியது. சென்னை வெறும் நூறு கிமீ என்றது. கார் அருவிச் சாலையில் நுழைந்து, காரை பார்க் செய்த பிறகு, இராஜேந்திரன் ஒரு வாரத்திற்கு் முன்பே இங்கு வந்த்தாகவும் அதை விட அதிகம் இப்போது நீர் உள்ளது என்றும் தெரிவித்தான்.
உடை மாற்றி காரை லாக் செய்து, நுழைவுச்சீட்டு ஒருவருக்குப் பத்து ரூபாய்,காருக்கு ஐம்பது ரூபாய் என்று கொடுத்து உள்ளே நுழைந்த போது், கும்பல் ஒன்று குளித்துக் கொண்டிருந்தது. ஒரு சிலர் குளித்து முடித்து அருகில் சிவன் கோயிலில் விபூதிப் பட்டையுடன் எதிர்ப்பட.டனர். இருவர் இருவராகக் குளிக்க முடிவடுத்து, அசோக், இராஜி முதலில் சென்றனர். இராஜி வழக்கம் போல யோகா போஸ் கொடுக்க கேமரா அதை படமெடுத்தது. அசோக் விரைவில் திரும்ப நானும் குணாவும் இராஜியுடன் இணைந்து ஆசை தீரக் குளித்தோம். தண்ணீர் குறைவாக இருந்தாலும் மிதமான வெப்பம், அதிக ஃபோர்ஸ் இல்லாத சுத்தமான நீ்ர் சுகமான குளியலே.
உடை மாற்றி தேனீர் அருந்தி காரைத் திருப்பி மெதுவாகப் பயனித்த போது SPS Guest rooms, விளம்பரப் பலகை கவர்ந்தது. உள்ளே சென்று பார்க் கலாம் நன்றாக இருந்தால் தங்கலாம், மலைகள் சூழ்ந்த பசுமை அழைத்தது. அறையைப் பார்வையிட்டு ஒரே அறையில் நால்வரும் தங்க வசதியான படுக்கை, ஏசி , 26 ஏக்கர் மாந்தோட்டம் ரெசார்ட்டாக மாறிக் கொண்டிருந்தது்.
சிறுவர்கள் சறுக்கு விளையாட்டு் நீச்சல் குளம், பறவைகள், முயல்கள், பெரிய நீச்சல் குளம், மிகப் பெரிய மாந்தோப்பு என பிடித்துப் போனது. நிர்வாகியாக சென்னையச் சேர்ந்த கவுன்சிலர் சொர்ணா அக்கா கறார் பேர்வழி. 3500₹ வாடகை குறைக்கவே இல்லை. காப்பி மற்றும் இரவு இட்லி மட்டும் பணம் செலுத்தி சாப்பிடலாம் என்றார் அக்கா. லக்கேஜ் இறக்கி வைத்து , நெடுஞ்சாலையில் மீண்டும் பயணித்து சுமார் ஐந்து கிமீ தொலைவில் பஞ்சாபி தாபா ஒன்றில் மதிய உணவு ருசியாகவே இருந்தது. தாபாக்கள் பெரும்பாலும் லாரி ஓட்டுநர்களுக்கானது என்றாலும் ருசியான உணவே. சிலருக்கு சுற்றுச் சூழல் பிடிக்காது.
அறைக்குத் திரும்பி் கதைகள் பேசி மாலையில் தோட்டம் வலம் வந்த போது அறிந்தோம், இவ்விடம் ஒரு தொழிற்சங்கத் தலைவருடையது என்று. அவரும் மாலையில் தங்குவதற்கு வந்திருந்தார். இரவு சூடான இட்லி சாப்பிட்டு, உறங்கிய போது சுமாரான தூக்கம் நண்பன் இராஜி வழக்கம் போல நானகரைக்கு எழுந்து விடியாத காலையில் குணாவுடன் நடைப் பயிற்சி சென்றான். காலை ஏழு மணிக்குக் கிளம்பி அருவியில் மறு முறை குளியல். அந்தக் காலையிலும் சுமாரான கூட்டம் பெரும்பாலும் பெண்கள். ஒரு காலத்தில் குடிகாரர்கள் மட்டுமே வருகின்ற இடமாக இருந்த அருவி நல்லதொரு மாற்றம்.
அனைவரும் தயாராகி ஒன்பதுக்குள் கிளம்பி அறையைக் காலி செய்து, சொர்ணா அக்காவிடம் விடை பெற்று பயணித்து , சாலையோர மெஸ் ஒன்றில் உட்கார்ந்து இட்லி, முட்டை தோசை என தேவையான காலையுணவு முடித்து, பிச்சாட்டூர் அணை பதினொரு கிமீல் உள்ளதென அப்பாதையில் பயணித்து, ஆளில்லாத அணை மீது நடந்து போட்டோக்கள் எடுத்தபோது, மலைகளுக்கு இத்தகைய அழகான நீர்த்தேக்கம் ஏன் சுற்றுலாத்தளமாக மாற்றப் படவில்லை என்ற கேள்வி எழுந்தது.
சிறிது நேர ஓய்விற்குப் பிறகு, மீண்டும் புறப்பட்டு் திருவள்ளூர் நோக்கிப் பயணித்து, வழியில் பாரம்பரிய தின்பண்டங்கள் உணவகத்தில் சுவையான சிற்றுண்டி, சுக்கு காப்பி முடித்து, திருவள்ளூரில் இராஜி இறங்கிக் கொண்டான். ஸ்ரீ பெரும்புதூர் தொழிற்பேட்டை பின்புறம் 36 ஏக்கர் நிலப் பரப்பில் , பெரிய வீட்டு மனைகள், Gated community என்பது போன்று சாலைகள், சம வெளியான கல் பதிக்கப் பட்டு சாலையோர மரங்கள் என அழகானதாகவே தோன்றியது. எதிர்காலத்தில் மிகப் பெரிய டவுன்ஷிப் உருவாக வாயப்பிருக்கிறது. அசோக்கிடம் ஒரு பிளாட்டைக் காட்டி இதை எனக்காக block பண்ணி வைத்து Layout வரைபடம், பிளாட் எண்கள் வரையரை முடிந்த பிறகு தெரிவியுங்கள் எனக் கூறி, சுங்குவார்சத்திரம் வந்து மெஸ் ஒன்றில் மதிய உணவு முடித்து அசோக், குணா பஸ் நிறுத்தத்தில் இறங்கிக் கொண்டனர்.
மணி இரண்டரை பிற்பகல், மீண்டும் தனியொருவனாகப் பயணம். வழி நெடுகிலும் அதே டேக் டைவர்ஷன் பயணம். முடிக்க இன்னும் ஓரிரு வருடங்கள் ஆகலாம். சென்னை பெங்களூருக்கு இரண்டரை மணி் நேரப் பயணம் என்பது ஒரு கனவே. ஐம்பது கிமீ சென்னையை விட்டு விலகி, பெங்களூர் வெளியில் உள்ள JP Nagar அடையவே ஏழுமணி நேரம் ஆனது. இரண்டு pit stop நேரம் கழித்தாலும் ஆறரை மணி நேரம். பார்ப்போம் அனைத்து மேம்பாலங்களும் கட்டப்பட்ட பிறகு, பூந்தமல்லி முதல் மடிவாளா வரை நான்கு மணி நேரப் பயணம் சாத்தியம். நகர்களின் மையப்பகுதிக்குச் செல்ல மூன்று மணி நேரம் ஆகும். இரண்டு நகரங்களின் Outer Ring Road தொடங்கப்பட்டு முடிவடையும் போது என் தலைமுறை நண்பர்கள் இருந்தால் மகிழ்ச்சியே.
பயணங்கள் என்னோடு இணைந்தவை, தொடர்ந்த படியே இருக்கும். எனது அனுபவங்கள் இக்கட்டுரைகளைப் படிக்கும் சிலருக்கு உதவலாம்.
( முற்றும்)
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக