வியாழன், 12 ஜூன், 2025

ஓவியம்

 தூரிகை ஒன்றில் எத்தனை வண்ணக் காவியம்

தூரத்து மலைகளும் கண்ணுக்கு அருகிலே அழகாய்
கடலும் ஆறும் கானக மயிலும் காகிதத்தில்
கடமை ஆற்றும் தொழிலாளி பெண்டிர் எனவும்
காதல் ததும்பும் காளையர் கன்னியர் முகங்களும்
வானத்து மேகம் வண்ணம் தீட்டும் கதிரவன்
மோனத்தில் அமர்ந்த முனிவரின் தவமும் சிலநேரம்
அழுகை கோபம் அன்பு அத்தனை உணர்வும்
அழகாய் மாற்ற அளவில்லா வண்ணப் பூச்சும்
சொல்லி மாளாது ஓவியம் என்பதே மாயையாய்
சொல்லும் காவியம் காலம் கடந்தும் என்றும்

கருத்துகள் இல்லை: