தூரிகை ஒன்றில் எத்தனை வண்ணக் காவியம்
தூரத்து மலைகளும் கண்ணுக்கு அருகிலே அழகாய்
கடலும் ஆறும் கானக மயிலும் காகிதத்தில்
கடமை ஆற்றும் தொழிலாளி பெண்டிர் எனவும்
காதல் ததும்பும் காளையர் கன்னியர் முகங்களும்
மோனத்தில் அமர்ந்த முனிவரின் தவமும் சிலநேரம்
அழுகை கோபம் அன்பு அத்தனை உணர்வும்
அழகாய் மாற்ற அளவில்லா வண்ணப் பூச்சும்
சொல்லி மாளாது ஓவியம் என்பதே மாயையாய்
சொல்லும் காவியம் காலம் கடந்தும் என்றும்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக