மெல்ல மெல்ல வளர்ந்து பெரிதானது எம்மூர்
நல்ல தெருக்கள் நான்கும் சாணம் மின்னின
கொல்லைப் புறத்தே தென்னை மாமரங்கள் வளர்ந்தன
கொள்ளுப் பாட்டி உரலில் வெற்றிலை பாக்கு
திண்ணை மேலே முதியோர் அரசியல் கூட்டம்
இரட்டை மாட்டைப் பூட்டிய வண்டிச் சத்தம்
இருட்டினை விலக்கி கதிரோன் கிரணங்கள் முற்றத்தில்
ஆடுகள் பட்டியை விட்டு ஓடும் சத்தம்
மாடுகள் கழுத்து மணியின் ஒலியும் கூடவே
தூரத்துக் கோவிலில் விநாயாகர் காப்புப் பாட்டு
தூக்கம் துறந்த குழந்தை ஒன்றின் அழுகை
விடியலின் கட்டியம் கூறிட இத்தனை உண்டு
குடிசையின் உள்ளே பொங்கிய சோற்றின் வாசமும்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக