தினமொரு கவிதை
தித்திக்கும் வரிகள்
எத்திக்கும் செல்லும்
எல்லைகள் இல்லை
கடலின் அலைபோல்
கதிரவன் வெப்பம்
கனலாய்ச் சுடும்
மேகமூட்டம் சூழும்
வாகாய் மழைதர
தென்றல் காற்று
தேகம் தொடும்
கூடுகள் துறந்து
குஞ்சுகள் பறக்கும்
ஆட்டுமந்தை பசியாற
புல்வெளி தேடும்
கழனி மேட்டில்
காயும் நெல்மணி
பாறைகள் மேலே
பாலகர் கூட்டம்
ஊரெலாம் சுற்றும்
உன்மத்தம் கொள்ளும்
கற்பனை வரிகளில்
கதைகள் எழுதும்
தொடரும் தினமும்
தொல்லை இல்லை
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக