கம்போடிய வியட்னாம் சுற்றுலா - 20/2 to 22/2/25 ( இறுதிச் சுற்று)
விமானத்தில் பயணித்து ஹோ சி மின் விமான நிலையத்தில் இறங்கி, ஓட்டல் செக் இன் இரண்டு மணிக்கு மேல் என்பதால் Reunification Palace, War Remnant Museum போன்ற இடங்களைச்சுற்றிப் பார்த்து, China Town என்ற இடத்தில் மீண்டும் ஷாப்பிங். பெரும்பாலும் கடை வைத்திருப்பவர் கொஞ்சம் ரூட் தான் பேசுவதில். நாமும் எப்படிப் பேச வேண்டும் என்று சொல்லிக் கொடுத்தோம். மதிய உணவு பிறகு ஓய்வு மீண்டும் மாலையில் post office, Opera வெளித் தோற்றம், மேரிமாதா உருவச் சிலை என சுற்றிப் பார்த்து இரவு உணவுக்கு முன் மீண்டும் ஷாப்பிங்.
மறுநாள் ஓய்வாக 11 30க்குக் கிளம்பி மதிய உணவு முடித்து 70 கிமீ பயணித்து, Cu Chi Tunnel க்குப் பயணம். இருபது ஆண்டுகள் நடந்த அமெரிக்கப் போரில் , அவர்களிடமிருந்து தப்பிக்க பூமிக்கு அடியில், பூச்சிகளைப் போல் சிறிய டணல்களை உருவாக்கி அதனுள் பாதுகாப்பான கடின வாழ்க்கையை வாழ்ந்திருக்கின்றனர். பெண்கள், குழந் தைகள் காப்பாற்றப் பட்டிருக்கின்றனர். கொரில்லா போர் முறைக்கு மிகவும் உதவிகரமானதாக. பார்க்கவே பிரமிப்பூட்டும் வகையில். நணபர் சிலர் 20 மீ மாதிரி டணல் ஒன்றில் உள் நுழைந்து தவழ்ந்தும் குனிந்தும் வெளியே வந்தனர், திருவண்ணாமலை கிரி வலப் பாதையில் உள்ள இடுக்குப் பிள் ளையார் போல.
போரின் துயரங்களை காட்சிப் படுத்திய விதம் வேறெந்த நாட்டிலும் இவ்வளவு சிறப்பாக இல்லை. பார்ப்பவரை ஏகாதிபத்திய நாடுகளின் மேல் கோபம் கொள்ளச் செய்யும்.
கம்போடியா அங்கோர் வாட், கில்லிங் பீல்ட், அரச மாளிகை என்றால், வியட்நாம் ஹலாங் பே Cruise, Bana hills, Cu Chi Tunnel, Beaches என பார்க்கச் சிறந்த இடங்கள். கை வினைப் பொருட்கள் காட்சியகம், வெள்ளிப் பொருட்கள் செய்யுமிடம், முத்து வளர்க்குமிடம், மூங்கிலில் இருந்து துணி வகைகள் உருவாக்குதல் என தொழில் வளர்ச்சி தொடர்பான இடங்களைப் பார்க்க வியப்பாகவே இருந்தது. கம்போடிய வெயில், ஹனாய், Da Nang மித வெப்பம், ஹோ சி மின் வெயில் என மாறி மாறி வெப்பநிலை கடந்தபோது பலருக்கும் தொண்டையில் கிச்கிச் , எனக்கு கொஞ்சம் ஓவர் டோஸ் இருமல்.
22 / 2 காலை ஓய்வு முழுவதும், மதிய உணவுக்குப் பிறகு பயணித்து, ஏர்போர்ட் அடைந்து, விமானத்தில் பறந்து கோலாலம்பூர் அடைந்து, மீண்டும் மற்றொரு விமானத்தில் பயணித்து, பெங்களூர் அடைந்து, வெளியே வந்து டாக்சி பிடித்து, வீடு சேர, விடியல் ஒன்றரை மணி.
உடல் தெம்பு இருக்கும் வரை பயணம் என்ற மாபெரும் கொள்கையை இன்று வரை கடைப்பிடிக்க முடிகிறதே என்ற நினைவோடு கண்கள் மெதுவாக மூடும்போது, வேறொரு பயணம் வரை ஓய்வு எடுப்போம் என்ற எண்ணம் மேலோங்கியது.
( தற்காலிக நிறுத்தி வைப்பு)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக